search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரிய ஊழியர்கள்"

    • மக்களுக்கு மின் விபத்து நேராமல் ஊழியர்கள் செயல்படவேண்டும்
    • அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக பணியாளர்கள் எர்த்ராடு கண்டிப்பாக பணியின்போது பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இயற்கை இடற்பாட்டால் மின் கம்பி கள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து பொதுமக்களுக்கு மின் விபத்து நேராமல் விரைந்து ஊழியர்கள் செயல்படவேண்டும். மழை நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க போதிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதில் பிரிவு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார்.

    தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.

    இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் செயலாளர்கள் காணிக்கைராஜ் (தஞ்சை), கலைசெல்வன் (நாகை), ராஜேந்திரன் (திருவாரூர்), தலைவர்கள் அதிதூதமைக்கேல்ராஜ் (தஞ்சை), வெற்றிவேல் (நாகை), சகாயராஜ் (திருவாரூர்), பொருளாளர்கள் சங்கர், கண்ணன்,முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
    • 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்ப த்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூடலூர் மின்வாரிய உதவிபொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இதேபோல சின்ன மனூர் கோட்டப்பொறி யாளர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர், தேனி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒரு ஆண் ஊழியரும் பணிபுரிந்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் பணியில் சேரும்போது கொடுத்த சான்றிதழ்களில் மதிப்பெண் திருத்தப்பட்ட தாக புகார் எழுந்தது. அதன்படி இவர்கள் பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
    • எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அந்தந்த செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    அதே சமயம் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.
    • குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்.

    உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.

    மேற்படி குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் பல்லடம் கிளை சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழக மின்வாரியத்தில் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் 58000 காலிபணியி டங்களை நிரப்பிட வேண்டும்.அரசாணை எண் 100/19.10.2010 இன் படி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும்,வாரிய ஆணை எண் 02 ஐ/12.04.2022/முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு,விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு எம்பிளாயீஸ் பெடரேஷன் சங்க செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் அங்குராஜ், வடுகநாத சாமி, சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழையில் சாய்ந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர்.
    • துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் வயல்களில் வளர்ந்துள்ள பயிர்களில் மழைநீர் தேங்கி உள்ளது.இதனால் தொண்டி அருகே செங்கான்வயல் கிராமத்தில் வயல் ஓரங்களில் ஊன்றப்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்தது.

    இதனால் மின்சாரம் தாக்கும் முன் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் சம்பந்தப்பட்ட மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து போர்மேன் முனியசாமி, மின்பாதை ஆய்வாளர்கள் கணேசன், ராஜேந்திரன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் டிராக்டர் உதவியுடன் வயலில் சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தி ஊன்றினர்.

    துரிதமாக செயல்பட்டதால் அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் மற்றும் மின்வாரிய ஊழியர்களை பாராட்டினர்.

    ×